கஞ்சா விற்பனை செய்த மூன்று பேர் கைது.!
Cannabis seller arrested
திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஆனைப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது சந்தேகத்திற்கிடமாக ஆட்டோவில் வந்த மூன்று பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
மேலும் இவர்கள் விரல்லியமாயன்பேட்டை சேர்ந்த விக்ரமன், நிலக்கோட்டையை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் பெரிய குளத்தை சேர்ந்த கண்ணன் என்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 3.300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.