ஒட்டகப் பாலில் டீ போடுடா., வடிவேல் சொன்னது போலவே தமிழகத்தில் ஒட்டகப் பாலில் டீ அமோக விற்பனை.! - Seithipunal
Seithipunal


ஒருவழியாக நடிகர் வடிவேலு சொன்னது போல் தமிழகத்திலும் ஒட்டகப் பாலை வைத்து டீ போட ஆரம்பித்துவிட்டார்கள். 

ஆம்., 'வெற்றிக்கொடி கட்டு' திரைப்படத்தில் துபாய்க்கு சென்று திரும்பிய நடிகர் வடிவேலு, தனக்கு ஒட்டகப் பாலில் தான் டீ வேண்டும் என்று, டீ கடை ஊழியரை தாக்குவது போன்ற நகைச்சுவைக் காட்சி இடம்பெற்றிருக்கும்.

இந்நிலையில், திண்டுக்கல் பகுதியில் ஒரு ஓட்டலில் உண்மையிலேயே தற்போது ஒட்டகப் பாலில் டீ விற்பனை செய்யப்படுகிறது.

ராஜஸ்தானிலிருந்து கோவைக்கு வந்த ஒருசில ஒட்டகங்களை வைத்து தமிழகத்தில் சில நகரங்களில் மட்டும் ஒட்டகப்பால் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

ஒரு லிட்டர் ஒட்டகப் பாலின் விலை ரூபாய் 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அதனை வாங்கி, திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச் சாலையில் சையது இப்ராஹீம் ஷா என்பவர் தனது டீக்கடையில் ஒட்டகப் பாலில் டீ விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

மேலும், ஒரு டீ 65 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார். இதுகுறித்து கடையின் உரிமையாளர் தெரிவிக்கையில்,

"தமிழகத்தில் கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் ஒட்டகப் பாலில் டீ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் திண்டுக்கல்லில் முதன்முறையாக இந்த ஒட்டகப் பாலில் டீ விற்பனை செய்யும் செய்ய தொடங்கி உள்ளேன்.

இந்த ஒட்டகப் பாலின் மூலம் புரதச்சத்து, கலோரின் அதிக சத்துக்கள் உள்ளது. மேலும் இது ஆண்மை விருத்திக்கு உதவும் என்பதால், பெரும்பாலான ஆண்கள் இந்த ஒட்டகப் பாலில் டீ அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

திண்டுக்கல் நகரில் இந்த ஒட்டகப் பாலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது" என்று அந்தக் கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

camel milk tea in dindigul


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->