அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி.!
bus accident in erode four members spot out
தமிழகத்தில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு கடந்த ஒன்றாம் தேதி முதல் பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. குறிப்பாக மாவட்டங்களுக்குள் மட்டும் பொதுப் போக்குவரத்து மட்டுமே தொடங்கப்பட்டது.
மாவட்டங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் தொடங்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். இதன் மூலம் 7 ஆம் தேதி முதல் பேருந்துகளில் எந்த மாவட்டத்திற்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். அதேபோல் பயணிகள் ரயில் சேவை வைக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தநிலையில், ஈரோடு மாவட்டம் லக்காபுரம் அருகே இரு சக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு. லக்காபுரத்திலிருந்து ஈரோட்டை நோக்கி சென்றிக்கொண்டிருந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
bus accident in erode four members spot out