கண் முன்னே காதலன் வெட்டி படுகொலை.. காதலி எடுத்த விபரீத முடிவு.!
Boyfriend killed lover suicide in covai
கோவையில் காதலன் வெட்டி படுகொலை செய்யப்பட்டதால் காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 21). இவர் செட்டிபாளையம் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்த தன்யா (வயது 20) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் இருவர் மட்டும் தனியாக கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இதனையடுத்து பெரியோர்கள் முன்னிலையில் அடுத்த மாதம் திருமணம் செய்து வைக்க இரு வீட்டார் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜூன் 5ம் தேதி தனது காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அவரது வீட்டிற்கு சென்ற பிரசாந்த்தை காதலியின் உறவினரான விக்னேஷ் என்ற இளைஞர் காதலியின் கண்முன்னே வெட்டி படுகொலை செய்தார்.
இதனையடுத்து கொலையாளியான விக்னேஷை செட்டிபாளையம் போலீசார் கைது செய்தனர். இதனால் மன வேதனையில் இருந்த காதலி தன்யா மறுநாள் இரவு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் தன்யாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் வீடு திரும்பினார். ஆனால் மன உளைச்சலில் இருந்த காதலி தனியா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து செட்டிபாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Boyfriend killed lover suicide in covai