காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நள்ளிரவில் வீட்டிற்கு சென்று, காதலன் கண்ட அதிர்ச்சி காட்சி.! - Seithipunal
Seithipunal


சென்னை கே.கே நகரில் உள்ள விஜயராகபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது ஆஷா ராவ் என்ற பெண், அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். இவர் குரோம்பேட்டையில் உள்ள 31 வயதான மரடோனா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

நேற்று ஆஷாராவுக்கு பிறந்த நாள் என்கிற காரணத்தால் காதலன் மரடோனா சர்ப்ரைஸ் கொடுக்க நள்ளிரவு நேரத்தில் ஆஷா ராவ் வீட்டிற்கு பரிசு பொருட்களை எடுத்துக்கொண்டு வந்துள்ளார். ஆனால், அந்த காதலியின் வீட்டில் வேறொரு ஆண் நண்பர் அந்தப் பெண்ணுடன் இருந்துள்ளார். இதை கண்டு மரடோனா மிகுந்த அதிர்ச்சியடைந்தார். 

பின்னர் ஆஷா ராவிடம் பயங்கரமாக மரடோனா சண்டை போட்டுள்ளார். அது எனது நண்பர் தான் புரிந்து கொள் என்று எவ்வளவோ கெஞ்சியுள்ளார். ஆனால், ஆண் நண்பர் வீட்டிற்குள் நள்ளிரவு நேரத்தில் இருக்கும் அளவிற்கு நட்பா? என்று மோசமாக மரடோனா பேசியுள்ளார். அவர் எனது நண்பர் தான் என்று அந்த பெண் எவ்வளவு புரிய வைக்க முயற்சித்துள்ளார். 

ஆனால், அதை ஏற்றுக் கொள்ளாத மரடோனா அந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளை பேசி திட்டி அவரை வீட்டின் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால், அந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அங்கிருந்து மரடோனா தப்பியோடிய நிலையில், போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy friend trying To make surprise to Girl Friend but situation changed The Moment


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->