பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபர்.. போக்சோவில் கைது.!
Boy cheat and pregnant to school girl
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 12ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பம் ஆக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த பிச்சனூர் காலனி தெருவை சேர்ந்த கண்ணன் மகன் தமிழ்ச்செல்வன் (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
இதனால் மாணவி தற்போது ஆறு மாத கர்ப்பமாக உள்ளார். இது குறித்து அறிந்த மாணவியின் வாடி அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் தமிழ்ச்செல்வனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
English Summary
Boy cheat and pregnant to school girl