இருசக்கர வாகனத்தில் மோதிய தனியார் கல்லூரி பேருந்து.! தலை நசுங்கி பலியான பெண்.!
bike accident to private college bus
தமிழகத்தின் திருப்பூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து ஒன்று இருசக்கரவாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பெண் ஒருவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்த பார்வதி தனது மருமகன் கருப்பசாமியுடன் சிவன்மலையில் நடந்த திருமணத்திற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, சந்திராபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த இருசக்கரவாகனம் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதியுள்ளது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பார்வதி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கருப்பசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
English Summary
bike accident to private college bus