2 வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை.! தாயே செய்த கொடூரம் காரியம்.!  - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த குரோம்பேட்டை அஸ்தினாபுரம், திருமலை நகர் சக்கரபாணி தெரு விரிவு பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் துரைப்பாக்கத்தில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றார். இவருக்கு சூரியகலா என்ற மனைவியும், ராகவி என்ற 6 வயது மக்களும், ஒரு ஆண் கைக்குழந்தையும் இருக்கின்றது.  

ராகவி அருகில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று மாலை, ராகவி வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து திடீரென கீழே விழுந்துள்ளார். இதன் காரணமாக தலையில் பலத்த காயமடைந்த ராகவியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

இருப்பினும், சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவள் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து சிறுமியின் மரணம் குறித்து காவல்துறையின் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் தாய் சூர்யகலா மீது காவல்துறையினர் சந்தேகமடைந்தனர் அவரிடம் கிடிக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தரும் விஷயம் வெளியாகி இருக்கின்றது. 

இந்நிலையில் சிறுமியை மாடியில் இருந்து தானே தூக்கி வீசியதாக சூர்யகலா ஒப்புக்கொண்டுள்ளார். இதன் காரணமாக சூரியர்களா கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது. மேலும், சூர்யகலா சிறுமிக்கு இரண்டாவது தாய் என்பது கூடுதல் தகவல். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

baby killed by her mother


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->