கள்ளகாதலுக்கு உதவிய ஆட்டோ ஒட்டுநர்.. பட்ட பகலில் வெட்டி கொலை..!
Auto Driver Murder In Thoothukudi
பட்ட பகலில் ஆட்டோ ஒட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், செல்சீனி காலணி பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஒட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவரை மர்ம நபர்கள் பட்டபகலில் வெட்டி கொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து, வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராயும் போது மாரிமுத்து மற்றும் கார்த்திக் ஆகியோர் அவரை கொலை செய்தது தெரியவந்தது.
அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணையில் ஈடுப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், மாரியப்பனின் மனைவிக்கு வேறு ஒருவருடன் கள்ளதொடர்பு இருந்ததும் அதற்கு பார்த்தசாரதி உதவி செய்ததாகவும் கூறினர்.
இதனால், அவர் மீது ஆத்திரத்தில் இருந்ததாகவும் சம்பவதன்று மதுகடையில் இருந்த அவரை கொலை செய்ததாகவும் தெரிவித்தனர். இந்த தகவலை அடுத்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Auto Driver Murder In Thoothukudi