ராமநாதபுரம் : ஓடும் பேருந்தில் ஓட்டுனருக்கு திடீர் வலிப்பு - பறிபோன ஆட்டோ ஓட்டுனரின் உயிர்.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் : ஓடும் பேருந்தில் ஓட்டுனருக்கு திடீர் வலிப்பு - பறிபோன ஆட்டோ ஓட்டுனரின் உயிர்.!

ராமநாதபுரம் அரசு போக்குவரத்து நகர் கிளையில் ஓட்டுநராக பணியாற்றியவர் ரவி. இவர் இன்று ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி செல்லும் பேருந்தை ஒட்டிச் சென்றுள்ளார். இந்தப் பேருந்து சுமார் 50 பயணிகளுடன் ராமநாதபுரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டது.

இதையடுத்து இந்தப் பேருந்து, பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் அருகே வந்த போது ஓட்டுநர் ரவிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி எதிரே இருந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் அமர்ந்திருந்த ஆட்டோ ஓட்டுநர் மலைச்சாமி என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.

அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேருந்தை மீட்டு ஆட்டோவில் சிக்கியிருந்த ஓட்டுநர் மலைச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அதன் பின்னர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பேருந்து ஓட்டுநர் ரவியையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

auto driver died for govt bus


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->