விவசாய நிலத்தில் மது அருந்திய குடிமகன்கள்... தட்டிகேட்டவர்கள் மீது சரமாரி தாக்குதல்..!
Attack on those who knocked over alcohol
விவசாய நிலத்தில் மது அருந்தியதை தட்டிகேட்டவர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வன்னியபுத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் சிலர் மது அருந்தியுள்ளனர். இதனை கண்ட அந்த தோட்டத்தின் காவலாளி ஆனந்தன் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவர்களை அங்கிருந்து செல்ல கூறியுள்ளனர்.
ஆனால், அவர்கள் செல்லாமல் மது அருந்தி வந்துள்ளனர். இதனால், இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அந்த கும்பல் ஆனந்தன் மற்றும் உறவினர்களை கடுமையாக தாக்கினர்.
இதனை அடுத்து, படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் நான்கு பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
Attack on those who knocked over alcohol