கேள்வி கேட்டிபியா.. "திமுக கவுன்சிலர்" மீது கொலைவெறி தாக்குதல்.. திமுக தலைவரின் மகன் மீது பரபரப்பு புகார்.!!
Attack on DMK councilor questioned in a municipal meeting
ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில் கேள்வி கேட்டது தொடர்பாக திமுக கவுன்சிலர் மீது தாக்குதல் நடத்திய திமுக நகராட்சி தலைவரின் மகன்..!!
ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில் தலைவரிடம் வார்டு பிரச்சனை குறித்து கேள்வி கேட்ட திமுக கவுன்சிலர் காளிதாஸ் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் திமுக நகர செயலாளர் கார்மேகம் என்பவர் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் நேற்று காலை நகராட்சி கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது 10வது வார்டு திமுக கவுன்சிலர் காளிதாஸ் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை பொதுமக்கள் பொதுபாதையாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு பொது மக்களுக்கு வேறு பாதை உள்ளது நகராட்சி இடத்தை வழங்க இயலாது என திமுக நகராட்சி தலைவர் கார்மேகம் பதில் அளித்துள்ளார்.
திமுக கவுன்சிலர் மீது கொலை வெறி தாக்குதல்!!
இந்த இந்த நிலையில் நேற்று இரவு 8:30 மணி அளவில் திமுக கவுன்சிலர் ராமநாதபுரம் தாயுமானசுவாமி கோயில் அருகே நின்று கொண்டிருந்த பொழுது ஒரு கும்பல் அவரை கொலை வெறியுடன் தாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இது தாக்குதல் குறித்து திமுக கவுன்சிலர் காளிதாஸ் கூறியதாவது "நகராட்சி கூட்டத்தில் கேள்வி கேட்டது தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா, முத்துராமலிங்கம் எம்எல்ஏவிடம் கூறினேன். நகராட்சித் தலைவரின் மகன் கார்த்திக் தரப்பினர் எப்படி கேள்வி கேட்பாய் என என்னை தாக்கியுள்ளனர்" எனக் கூறியுள்ளார்.
திமுக கவுன்சிலருக்கே இந்த நிலைமை..!!
ராமநாதபுரம் நகராட்சியில் பொதுமக்களின் பாதைக்காக கேள்வி எழுப்பிய திமுக கவுன்சிலருக்கே இந்த நிலை என்றால் பொதுமக்கள் தங்கள் குறைகளை எவ்வாறு நகராட்சி தலைவரிடம் கூறுவார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள திமுக நகராட்சி தலைவர் கார்மேகம் கவுன்சிலர் தாக்கப்பட்ட சமூக பற்றி எனக்கு எதுவும் தெரியாது எனவும் எனது மகனுக்கு தொடர்பு உள்ளதாக கூறுவது தவறான தகவல் எனவும் விளக்கம் அளித்துள்ளார். திமுக கவுன்சிலர் மீது திமுக தலைவரின் மகன் தாக்குதல் நடத்திய சம்பவம் ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Attack on DMK councilor questioned in a municipal meeting