ATM-ஐ திறக்க முயற்சி..! விபரீத சத்தம்...ஓட்டம் பிடித்த திருடனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!
ATM theft in thindivanam
திண்டிவனத்தில் இருக்கும் நேரு வீதியில் பாரத் ஸ்டேட் பாங்க் ஏடிஎம் ஒன்று இருக்கின்றது. நேற்று முன்தினம் வங்கி ஊழியர்கள் ஏடிஎம் ஐ பூட்டி விட்டு அதன் சாவியை மறந்து, அங்கேயே வைத்துவிட்டு சென்றுவிட்டனர். மறுநாள் அங்கு சென்று ஒரு நபர் ஏடிஎம் அருகே சாவி இருந்ததை பார்த்துள்ளார்.
எனவே, அதனை எடுத்து ஏடிஎம் ஐ திறக்காமல் சென்றுள்ளார். ஊழியர்கள் திரும்பி வந்து பார்க்கையில், சாவியானது அங்கே இல்லை. அதன்பின்னர் சாவியை எடுத்துக் கொண்டு சென்ற நபர் நேற்று இரவு வந்து திறக்க முயற்சித்து இருக்கின்றார். வங்கியின் கேட்டை தவறாக எவரேனும் திறந்தால் உடனடியாக அலாரம் அடிக்கும் அமைப்பு பொருத்தப்பட்டிருந்தது.
எனவே திருடன் பூட்டை திறக்க முயற்சித்த பொழுது அலாரமானது அடித்துள்ளது. எனவே, இந்த சத்தத்தை கேட்ட திருடன் பயந்து அலறி அடித்து அங்கிருந்து தப்பியோடி இருக்கின்றான். வங்கியின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஊழியர்கள் வைத்து பார்க்கையில் திருடன் பூட்டை திறக்க முயற்சித்து, பயந்து ஓடிய காட்சிகள் பதிவாகி இருந்ததை கண்டுள்ளனர்.
பின்னர் காவல்துறை விசாரணையில் அந்த திருடன் அதே பகுதியை சேர்ந்த சுகுந்தன் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சுகுந்தனை கைது செய்துள்ளனர்.