ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் தான் பதவி நீக்கம் செய்ய முடியும் - ஆளுநருக்கு பதிலடி கொடுத்த அப்பாவு.!
assembly leader appavu response governor rn ravi for senthil balaji issue
ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் தான் பதவி நீக்கம் செய்ய முடியும் - ஆளுநருக்கு பதிலடி கொடுத்த அப்பாவு.!
தமிழகத்தின் மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்த நிலையில் பணமோசடி வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட போது நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டார்.
அதன் பின்னர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் சென்னை காவிரி மருத்துவமனைக்கு மற்றம் செய்யப்பட்டு அங்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் தொடர் சிகிச்சையில் உள்ளார். இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். ஆகவே, உடனடியாக அவரை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கியுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் எம்.அப்பாவு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, “அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எந்த அதிகாரமும் இல்லை.
அவர் போட்ட உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டால் அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவியில் இருந்து நீக்க முடியும்” என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
assembly leader appavu response governor rn ravi for senthil balaji issue