பெரியார் வேஷமிட்டகுழந்தையை கொல்ல வேண்டும் - குரூர கருத்து பதிவிட்டர் கைது..! - Seithipunal
Seithipunal


பெரியார் வேடமிட்ட குழந்தைக்கு எதிராக வன்முறை கருத்தை பதிவிட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குழந்தை ஒன்று பெரியார் வேடமிட்டு மூடநம்பிக்கை எதிர்ப்பு, பெண் விடுதலை உள்ளிட்ட பெரியாரின் கருத்துகளை நாடகமாக நடத்தி காட்டி இருந்தனர். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், கோவில்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் குமார் என்பவர் அந்த குழந்தையை கொன்று தூக்கிலிட வேண்டும் என பதிவிட்டிருந்தார். இந்த பதிவுக்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்  காவல்துறையில் புகார் அளித்தனர்.

குழந்தை என்றும் பாராமல் கொலை செய்ய வேண்டும் என பதிவிட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இந்நிலையில், அவரை கோவில்பட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குழந்தைகள் மீதான குரூர வெறுப்பை வெளிப்படுத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

As Periyar wants to kill the disguised child


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->