அக்கடாவென வேலையை பார்த்தவரின் மண்டையை பிளந்த சோகம்.. தா.பழூரில் சம்பவம்.!
Ariyalur T Palur Murder Attempt Police Investigation 6 March 2021
சிவனேவென பணியை கவனித்துக்கொண்டு இருந்தவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் மதனத்தூர் கிராமத்தை சார்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 45). இவர் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வரும் நிலையில், நேற்று சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார். இதன்போது, அவ்வழியாக வந்தவர்களிடம் தகராறு செய்ததாக தெரியவருகிறது.
திடீரென ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற ஜெய்சங்கர், கையில் கொண்டு வந்த அரிவாளை எடுத்து சாலையோரத்தில் மற்றொரு பணியை செய்துகொண்டு இருந்த கலைவாணன் (வயது 35) என்பவரின் தலையில் வெட்டியுள்ளார். மேலும், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தும் குத்தியுள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கலைவாணனை மீட்க முயற்சித்த நிலையில், ஜெய்சங்கர் விடாமல் கலைவாணனை தொடர்ந்து தாக்க முயற்சித்துள்ளார். இதனையடுத்து, கிராம மக்கள் ஜெய்சங்கரை ஒன்று சேர்ந்து நையப்புடைத்து, சாலையோரத்தில் இருந்த கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர்.
மேலும், பலத்த காயமடைந்து இருந்த கலைவாணனை மீட்டு அவசர ஊர்தி மூலமாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இது குறித்து தா.பழூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஆய்வாளர் ஜெகதீசன் தலைமையிலான காவல் அதிகாரிகள், ஜெய்சங்கரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முயற்சி செய்தனர்.
ஆனால், அவசர ஊர்திக்குள் ஏற மறுப்பு தெரிவித்த ஜெய்சங்கர் வாக்குவாதத்தில் ஈடுபடவே, அவரை சமாதானப்படுத்திய காவல் துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Ariyalur T Palur Murder Attempt Police Investigation 6 March 2021