தூக்கில் தொங்கிய கணவன்., தொந்தரவு கொடுத்த காதலன்.! கண்காணித்த காவல்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


சாப்பாட்டில் கணவனுக்கு விஷம் கலந்து கள்ளக்காதலனுடன் சேர்ந்து துப்பட்டாவால் கொலை செய்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னை காட்டுப்பாக்கம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்த தரணிதரன் என்பவர் கார் ஓட்டுனராக இருக்கின்றார். இவருக்கு இரண்டு குழந்தைகளும், பவானி என்ற மனைவியும் இருக்கின்றனர். கடந்த 22ஆம் தேதி கடன் தொல்லையால் தரணிதரன் தற்கொலை செய்து கொண்டதாக பவானி கண்ணீர் விட்டு அழுது இருக்கின்றார். துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்டு கிடந்த நிலையில் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், பவானியின் நடவடிக்கைகளை ஒருபுறம் கண்காணித்து வந்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்து இறுக்கப்பட்டு மரணமடைந்ததாக அறிக்கை வந்துள்ளது. மேலும் பவானியின் செல்போனுக்கு அடிக்கடி அழைப்பு வந்துள்ளது. எனவே, இது கொலையாக இருக்கலாம் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பவானி வாக்குமூலம் அளித்துள்ளார். 

அதில் தானே தன் கணவரை கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் கொலை செய்தேன் என்றும், முதலில் அவருக்கு சாப்பாட்டில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்து கொலை செய்ய தனது கள்ளக்காதலன் உத்தரவிட்டார் என்றும், அதன்படி சாப்பாட்டில் பூச்சி மருந்தைக் கலந்த போது தனது கணவர் உயிரிழக்கவில்லை என்றும், எனவே, கள்ளக்காதலனுக்கு இதுகுறித்து தகவல் அளிந்த போது அவரும் வந்து இருவரும் சேர்ந்து அவர் கழுத்தை நெரித்து கொலை செய்தோம் என்றும் கூறியுள்ளார். இதனை பவானி நடித்து காண்பித்த போது காவல்துறையினர் ஆடிப் போய் விட்டனராம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

An women killed her husband to enjoy her boy friend


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->