ஏரியில் மீன் பிடித்த போது சேற்றில் சிக்கி முதியவர் பலி - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரியில் மீன் பிடித்த போது சேற்றில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் சின்ன மாங்காடு குப்பம் பகுதியை சேர்ந்தவர் துல்லா குட்டி(65). இவர் ஏரியில் மீன் பிடிப்பதற்காக 12 பேருடன் பாடகில் சென்றுள்ளார்.

அப்பொழுது ஏரியில் மீன் பிடிப்பதற்காக வலையை இழுத்த போது துல்லா குட்டி சேற்றில் சிக்கி மூழ்கியுள்ளார். இதையடுத்து சக மீனவர்கள் போராடி துல்லா குட்டியை மீட்டனர்.

ஆனால் துல்லா குட்டி ஏற்கனவே உயிரிழந்து விட்டார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவல்யடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துல்லா குட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

An old man drowned in the lake while fishing


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->