திமுக vs பாஜக.,வா?! அப்பா நாங்க யாரு? தமிழக அரசியல் களம் தெரியுமா? - முன்னாள் அமைச்சார் அதிரடி பேட்டி! - Seithipunal
Seithipunal


எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து பிரதமராகும் தகுதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே உள்ளது என்று, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அதில், தமிழகத்தில் செல்வாக்கு உள்ள கட்சியின் தலைமையில் தான் கூட்டணி என்று முதல்வர் கூறிய கருத்து குறித்து பதில் அளித்த செல்லூர் ராஜு,  முதல்வரின் இந்த கருத்தை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.

எதிர்காலத்தில் தமிழகத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் தான் பிரதமராக வரவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த செல்லூர் ராஜு, தமிழர் பிரதமராக வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியை மனதில் வைத்து தான் அமித்ஷா இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்றார்.

நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதில் அளித்த செல்லூர் ராஜு, யார் யாரோ தமிழகத்தில் முதல்வர் என்று சொல்லும் போது, நடிகர் விஜய் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என்றார்.

தங்களுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி என்று பாஜகவினர் தெரிவித்து வருவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த செல்லூர் ராஜு, திமுகவுக்கும் - பாஜகவுக்கும் இடையே தான் போட்டி என்று சொன்னால் அதனை நாங்கள் ஏற்க மாட்டோம். அதிமுகவுக்கும் - திமுகவுக்கும் இடையே போட்டி என்பதுதான் தமிழ்நாட்டின் கள அரசியல் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Sellur Raju Say About DMK vs BJP


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->