அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர். சிலைக்கு நிர்வாகிகள் மரியாதை! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 52 வது தொடக்க விழா தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

அதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க சார்பில் அ.தி.மு.க.-52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கும் அதன் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கும் மாநகர மாவட்ட செயலாளர் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இந்த நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர், முன்னாள் எம்.பி, முன்னால் துணை மேயர், மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம், அப்பகுதி துணை செயலாளர். மாவட்ட பிரதிநிதி மற்றும் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK 52nd Annual Inaugural Ceremony MGR statue Administrators respect 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->