பிரசாரத்திற்கு முக. ஸ்டாலின் போனால் கூட கூட்டம் வராது - நடிகர் குஷ்பு காட்டம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள செங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கலந்துகொண்டார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ”தாய்மார்களுக்கு 1,000 ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா?. 

தமிழ்நாட்டில் 3,500 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் திமுக ஆள் தானே? இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார். போதைப்பொருளுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டுத் தாய்மார்களின் பிரச்சனையை தீர்த்து வைக்கவில்லை” என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

மேலும், திமுகவில் பிரசாரம் செய்ய யாருமில்லை. அதனால் கமல்ஹாசன் போன்ற முகம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. முதலமைச்சர் முக.ஸ்டாலின் போனாலும் கூட்டம் வராது. கூட்டம் கூட்டுவதற்காக அவர்களுக்கு கமல்ஹாசன் வேண்டும். அதனால் சேர்த்துள்ளார்கள். 

நாடு முழுவதும் காங்கிரஸ் மற்றும் வேறு கட்சிகளில் இருந்து விலகி ஏராளமானோர் பாஜகவில் இணைகிறார்கள். கடந்த 65-வது ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் சாதிக்க முடியாததை 10 ஆண்டுகளில் மோடி சாதித்துக் காட்டியிருக்கிறார். இதுதான் காங்கிரஸுக்கும், பா.ஜ.கவுக்கும் இடையேயான வித்தியாசம்.

காங்கிரஸால் சொந்தக் காலில் நிற்க முடியவில்லை. எந்த இடத்துக்குப் போனாலும் காமராசர் பெயரை வைத்துத் தானே பிச்சையெடுக்கிறார்கள். திமுக அல்லது அதிமுக உள்ளிட்ட இரண்டு கட்சிகளிலும் மாறி மாறிப் பயணம் செய்கின்றனர்” என்று குஷ்பு விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor kushboo speech in chennai drugs remove protest meeting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->