நள்ளிரவில் விபத்து..போலீசாருக்கு மாமூலாக கொடுக்க போன பொருளை பார்த்து ஷாக்.!  - Seithipunal
Seithipunal


கோவையில் நள்ளிரவு நேரத்தில், மது போதையில் காரை ஓட்டிகொண்டு வந்து இருசக்கர வாகனங்களின் மீது மோதிய நபர், காவல்துறையிடம்  சிக்கியதும் ஆளுக்கு ஒரு லேப்டாப்பை மாமூலாக தருவதாக கெஞ்சி இருக்கின்றார். 

காந்திரபுரத்தைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்ற நபர், லேப்டாப் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை ஒன்றை வைத்து நடத்துகின்றார். நள்ளிரவு நேரத்தில் போதை தலைக்கேறிய நிலையில் காரை ஓட்டி வந்த அவர், சிவானந்தா காலனியில் இருக்கும் சாலையோர கொடிக்கம்பங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகின்றது.

இதன் காரணமாக அந்த பகுதியில் இருந்த பொதுமக்களே ஸ்தீபன்ராஜை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அப்போது அவர், தன்னுடைய கழுத்தில் இருந்த செயினை அறுத்து வீசியவாறு காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் காவல்துறையின் அவரை கைது செய்து காவல்நிலையதிற்கு அழைத்துச் சென்ற்னர். அங்கே ஸ்டீபன்ராஜ், போதை தெளிந்த பின்னர் காவல் அதிகாரிகள் ஒவ்வொருக்கும் ஒரு லேப்டாப் கொடுத்துவிடுவதாகவும் தன்னை விட்டுவிடுமாறும் கூறி பேரம் பேசி இருக்கின்றார். என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

accident in kovai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->