"செங்கல்பட்டு அருகே படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து ,இளைஞர் ஒருவர் பலி! - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து வந்தவாசி செல்லும் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த நபர் ஒருவர் கால் தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டில் இருந்து மாமண்டூர் வழியாக வந்து கொண்டு இருந்த அரசு பேருந்தின் கடைசி படிக்கட்டில் இருந்து இளைஞர் ஒருவர் தொங்கிக்கொண்டு வந்திருக்கிறார்.

பேருந்து புக்கத்துறையை கடக்கும் போது படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வந்த இளைஞர் கால் தவறி கீழே விழுந்து இருக்கிறார்.

உடனே பேருந்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கின்றனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதால் சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாக தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

உயிரிழந்த இளைஞரிடம் எந்தவித ஆதாரமும் இல்லாத காரணத்தால் செங்கல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து முகவரி மற்றும் உறவினர்களை பற்றி விசாரித்தனர்.

மேற்படி விபத்தில் இறந்தவர் யார் என்ற தகவலை அறியும் பொருட்டு காவல்துறையினர் விசாரணை செய்ததில், இறந்தவர் கோடிதண்டலம் கிராமம் இருளர் இனத்தை சேர்ந்த கோபால் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 27) என்பது தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A young man passes away falling from the stairs near Chengalpattu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->