மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மேட்டுவலவு பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி சிங்காரவேலன் (42). இவருக்கு ஒரு பெண் குழந்தையும், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சிங்காரவேலன் ஒரு வீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தபோது, மேல் பகுதியில் சென்ற உயர் மின்னழுத்த வயரை கவனிக்காமல் கீழிருந்து கம்பியை மேல் நோக்கி தூக்கினார்.

அப்பொழுது திடீரென மின்சாரம் தாக்கி சிங்காரவேலன் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதையடுத்து மற்ற தொழிலாளர்கள் சிங்காரவேலனை மீட்டு சிகிச்சைக்காக தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிங்காரவேலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தேவதானப்பட்டி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Worker killed electrocuted in Theni


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->