தர்மபுரி || மரத்தில் இருசக்கர வாகனம் மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் புளியமரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்து உள்ளார்.

தர்மபுரி மாவட்டம் குட்டப்பட்டி பகுதியை சேர்ந்த கவரன் என்பவரின் மகன் அரவிந்தன் (23). இவர் நண்பரான தாளர்பள்ளம் பகுதியை சேர்ந்த சிவகுமார்(22) என்பவருடன் நேற்று இருசக்கர வாகனத்தில் பெத்தநாயக்கன்பாளையம் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார்.

பின்பு அங்கிருந்து, வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது பயர்நத்தம் வளைவு பகுதி அருகே, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் அப்பகுதியில் இருந்த புளிய மரத்தின் மீது மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிவகுமார் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து பொம்மிடி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A twowheeler hit a tree in dharmapuri


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->