திருநெல்வேலி.! மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்ற ஆடு மேய்க்கும் நபர் திடீர் மரணம்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்ற ஆடுமேய்க்கும் நபர் திடீரென மரணமடைந்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள வெங்கடாசலபுரம் நடு தெருவை சேர்ந்தவர் மாடசாமி.

இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி செல்லும் போது அங்கிருந்த மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்று உள்ளார்.

அப்போது மரத்தில் சாய்ந்தவாறு மாடசாமி இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்தவர்கள் கங்கைகொண்டான் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாடசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A shepherd standing in the shade of a tree suddenly dies in Tirunelveli


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->