தேனி: மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்துள்ளார்.

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே உள்ள குமணன்தொழு பகுதியை சேர்ந்தவர் தம்பிதுரை. இவரது மகன் சுதாகரன் (35).

இவர் ஆடு, மாடுகள் மேய்த்து வந்த நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள கொடிதுரை என்பவரின் தோட்டத்தில் ஆடுகளுக்கு இலை கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது உயரே சென்ற மின்னழுத்த கம்பி எதிர்பாராத விதமாக சுதாகரன் மீது உரசியதில், தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் சுதாகரன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மயிலாடும் பாறை காவல்துறையினர் சுதாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A person killed electrocuted in theni


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->