மனவேதனையில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


மதுரையில் மனவேதனை அடைந்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மதுரை மாவட்டம் ஓடைப்பட்டி மந்தை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகு (50). இவருடைய மகன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். 

இதையடுத்து இவருடைய மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விபத்தில் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இவர்கள் இருவரின் உயிரிழப்பால் வாழ்க்கையே வெறுத்து, மனம் உடைந்த அழகு வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அழகின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A person commits suicide by hanging in madurai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->