விருதுநகர்.! குட்கா விற்பனை செய்த நபர் கைது.!
A person arrested for gutkha selling in virudhunagar
விருதுநகர் மாவட்டத்தில் குட்கா விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில் உள்ள வெள்ளைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த முத்துராசு(32) என்பவர் குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து போலீசார் முத்துராசுவை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து முத்துராசுவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த குட்கா பண்டல்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் போலீசார் விசாரணை செய்ததில் முத்தராசு மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
English Summary
A person arrested for gutkha selling in virudhunagar