காதலியுடன் பிரச்சனைன்னா இப்படியா.!! நீங்கலாம்.,எங்கே இருந்துயா வரீங்க.!!
a men atrocity in hydrabath
ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், புறப்படும் இண்டிகோ மற்றும் ட்ரூஜெட் ஆகிய இரு விமானங்களிலும் வெடிகுண்டு இருப்பதாக இன்று கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர். இரு விமானங்களையும் சோதனையிட்டு வெடிகுண்டுகள் இல்லை என்பதை உறுதி செய்தனர்.
இதனால் சிறிது நேரத்தில் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அந்த போலி அழைப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த அழைப்பாளர் சென்னையை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் என தெரியவந்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த விசுவநாதன் விற்பனை பிரதிநிதியாக தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவர் சென்னை செல்வதற்காக இன்று ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
இவருக்கு அச்சமயத்தில் தனது காதலியுடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதிகப்படியான மது போதையில் இருந்த விசுவநாதன் வெடிகுண்டுகள் இருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். விசாரணைக்கு பின்னர் விசுவநாதனை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
a men atrocity in hydrabath