ராமநாதபுரம்: அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை..!!
A man commited to suicide
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததால் மனமுடைந்து அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், தேரிருவேலி புதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (வயது42). இவர் இளங்காக்கூர் அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். பள்ளிக்கு செல்வதற்க்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக முதுகுளத்தூரில் வீடேடுத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில், அவருக்கு சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்படிருந்தது. இதனால் அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.
இதற்கிடையில், அந்த பகுதியில் உள்ள தண்டவாளத்திற்க்கு சென்று உடலில் தீ வைத்து கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
A man commited to suicide