#திருச்சி : 14 வயது சிறுமி பலாத்காரம்.! கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை.! நீதிமன்றம் அதிரடி - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கருப்பையா (50). இவர் கடந்த 2020ஆம் ஆண்டு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 14 வயதுடைய சிறுமியை கடத்திச் சென்று காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கருப்பையாவை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கருப்பையாவுக்கு ஆயுள் தண்டனையும், கடத்திச் சென்ற குற்றத்திற்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A laborer who raped a 14 year old girl was sentenced to life imprisonment in Trichy


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->