கள்ளக்குறிச்சி அருகே கொடூரம்!! வீட்டில் இருந்த மாணவிக்கு நேர்ந்த அவலம்!!  - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன்மலையில் பகுதியில் உள்ள மேல்முண்டியூர் என்ற இடத்தில் 17 வயது மாணவி ஒருவர் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து முடித்துள்ளார். கோடை விடுமுறை முடிந்ததும் பிளஸ்-2 படிப்பிற்காக பள்ளிக்கூடம் செல்ல இருந்தார்.

இந்நிலையில், அந்த மாணவி தனது உறவினர் வீட்டில் அதே பகுதியில் தங்கி இருந்துள்ளார். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த இளங்கோவன் (29) என்பவர் மாணவியை வேங்கடம்பேட்டை என்ற இடத்திற்கு கடத்திச் சென்றுள்ளார். அந்த இடத்தில் உள்ள தனது நண்பர் வீட்டில் அந்த பிளஸ் 1 மாணவி அடைத்து வைத்து அவர் கற்பழித்துள்ளார்.

அதன் பின்னர் மாணவியை இளங்கோவன் கொண்டுவந்து அவரது இடத்திலேயே விட்டுவிட்டார். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு பெற்றோர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர்,

கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின்கீழ் இளங்கோவனை காவலர்கள் கைது செய்தனர். இளங்கோவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A girl rapped by 29 years old men


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->