ஏரியில் குளிக்க சென்ற விவசாயி தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
A farmer who went to bathe in the lake drowned
ஏரியில் குளிக்க சென்ற விவசாயி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவ்வகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வீரமநல்லூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி பழனிவேல் (50). இவர் வேள்விமங்கலம் அருகே உள்ள ஏரியில் குளிப்பதற்காக நேற்று காலை சென்றுள்ளார்.
அப்பொழுது அங்கு குளித்துக் கொண்டு இருக்கும் போது சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கி, பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் இந்த சம்பவம் குறித்து குன்னம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பழனிவேலினும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A farmer who went to bathe in the lake drowned