6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.! கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி குமார் (37). இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த ஆறு வயதுடைய சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்பு வீட்டில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதையடுத்து அங்கிருந்து வீட்டிற்கு சென்ற சிறுமி பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி போச்சோ சட்டத்தின் கீழ் குமாரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A construction worker arrested for sexually harassed a 6 year old girl in erode


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->