மதுரை : 4-வது மாடியில் இருந்து குதித்து 9 வயது சிறுமி தற்கொலை..! தாய் இறந்த சோகத்தில் விபரீத முடிவு...!
A 9 year old girl committed suicide by jumping from the 4th floor in madurai
மதுரை மாவட்டத்தில் தாய் இறந்த துக்கத்தில் 4-வது மாடியில் இருந்து குதித்து 9 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் வில்லாபுரம் அடுத்த பத்மா தியேட்டருக்கு எதிரே 3 மாடி குடியிருப்பை சேர்ந்தவர் தொழிலாளி கண்ணாயிரம். இவரது மனைவி பொண்ணு. இவர்களது மகள் இளவரசி(9). இந்நிலையில் கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த மாதம் பொண்ணு கணவர் மற்றும் பிள்ளைகளை பிரிந்து சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
ஆனால் மனவேதனையில் இருந்த பொண்ணு உறவினர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் தாயின் இழப்பை தாங்க முடியாத இளவரசி கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் இளவரசி வீட்டில் யாரும் இல்லாத போது 4-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த இளவரசியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இளவரசி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A 9 year old girl committed suicide by jumping from the 4th floor in madurai