புதுக்கோட்டை அருகே பரிதாபம்.! விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் சடையம்பட்டி படுதினிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அழகப்பன். இவரது மகன் ராகுல்(3) வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். இதையடுத்து ராகுல் திடீரென மாயமாகியுள்ளான். இதனால் குடும்பத்தினர் ராகுலை அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தனர்.

ஆனால் எங்கு தேடியும் ராகுல் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து வீட்டின் அருகே உள்ள கிணற்றில் ராகுல் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகமடைந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இறங்கி சிறுவனை தேடினர். இந்நிலையில் சிறுவனை கிணற்றுக்குள் இருந்து தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A 3 year old boy fell into a well and died in Pudukkottai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->