தொடர் விடுமுறை - தமிழகம் முழுவதும் 640 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு.!  - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்தத் தினத்தை முன்னிட்டு சென்னை மற்றும் பிற ஊர்களில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்ப திட்டமிட்டு வருகின்றனர். 

அதுமட்டுமல்லாமல், அரையாண்டு தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு 10 நாட்கள் வரை விடுமுறையும் அறிவிக்கப்பட உள்ளதனால் பொதுமக்கள் சுற்றுலா மற்றும் சொந்த ஊர்களுக்கு செல்லவும் திட்டமிட்டு வருகின்றனர்.

இவர்களின் வசதிக்காக இந்த ஆண்டு 640 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 22-ம் தேதி கூடுதலாக 350 பேருந்துகளும், 23-ம் தேதி கூடுதலாக 290 பேருந்துகளும் இயக்கப்படும்.

சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி, வேளாங்கண்ணி மற்றும் இதர ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

640 special bus run in tamilnadu for holiday


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->