பலகோடி மதிப்புள்ள வலம்புரி சங்குகள்.. விற்க முயன்ற 6 பேரை தட்டி தூக்கிய வனத்துறை..! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பகுதியில் அரியவகை வலம்புரி சங்குகளை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை பல கோடிக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாகவும் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திருக்குறுங்குடி வனசரகம் ஏர்வாடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அவர் வீட்டில் மறைத்து வைத்திருந்த 2 அரியவகை வலம்புரிச் சங்குகளை பதுக்கி வைத்திருந்த கதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து சண்முகம் மற்றும் அவருடைய கூட்டாளிகளான சூரியன், பிரவீன், ராஜன், சரவணன், வீரபெருமாள், ஆறுமுகம் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். இவர்களிடமிருந்த 1.4 கிலோ மற்றும் 1.5 கிலோ எடையுள்ள 2 வலம்புரி சங்குகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 2 வலம்புரி சங்குகள் அரியவகை சங்குகள் என்பதும் பல கோடிக்கு விற்பனை செய்ய முயற்சித்தும் தெரியவந்தது. கைதான 6 பேரும் நாங்குனேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாங்குநேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 people were arrested for trying to sell valampuri conch


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->