கும்பகோணத்தில் அதிர்ச்சி.. 5 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை - 50 வயது பாட்டி வெறிச்செயல்.!
50 years old lady arrested in kumbakonam for harassmrnt
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரி விளந்தகண்டம் பகுதியை சேர்ந்தவர் கோகிலா. 50 வயதான இவர், கும்பகோணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் குழந்தைகள் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், கோகிலா கடந்த 16-ந் தேதி அதே பள்ளியில் படிக்கும் ஐந்து வயது சிறுவன் ஒருவன் இடைவேளை நேரத்தில் கழிவறைக்கு சென்றபோது, அவரை பின் தொடர்ந்து கழிவறைக்குள் சென்ற கோகிலா, அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து வேறு யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று அந்த சிறுவனை மிரட்டியும் உள்ளார். ஆனால், அந்த சிறுவன் நடந்த சம்பவங்களை தனது அண்ணனிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் சிறுவனின் பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர், கோகிலா மீது கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் கோகிலா மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
50 years old lady arrested in kumbakonam for harassmrnt