கம்யூ. அலுவலகத்தை தாக்கிய கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது.!! - Seithipunal
Seithipunal


சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில அலுவலகம் பாலன் ல்லம் மீது நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்ட செயலாளர் சிவா அளித்த புகாரி அடிப்படையில் மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணை முடிவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது கற்கள் மற்றும் பாட்டின் வீசிய அலெக்ஸ், பாரதி, அருண்குமார், பார்த்திபன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு பின்புறம் இருக்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசித்து வரும் 4 பேரும் மது போதையில் காவலாளி சுதாகர் உடன் தகராறில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 people including college students arrested for attacking CPI office


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->