கல்லூரி விடுதி உணவு சாப்பிட்ட 31 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி.!
31 college students food poison in Trichy
திருச்சியில் உள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி பெண்கள் கல்லூரியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு கல்லூரி வளாகத்திலேயே விடுதி உள்ளது. இந்த நிலையில் கல்லூரி விடுதியில் நேற்று முன்தினம் இரவு மாணவிகள் சாப்பிட்ட சாப்பாடு நஞ்சாக மாறி உள்ளது. அதன் காரணமாக 27 மாணவிகள் மற்றும் 4 விடுதி காப்பாளர்கள் என 31 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து உடனடியாக 31 பேரும் சிங்காரத் தோப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 15 பேர் சிகிச்சை முடிந்து விடுதி திரும்பிய நிலையில், 16 மாணவிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி உணவு பிரச்சனையால் உடல் உபாதை அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
31 college students food poison in Trichy