சென்னை விமான நிலையத்தில் 22 கோடி போதைப்பொருள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் படி விமான நிலையத்தில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பயணிகளிடம் சோதனை நடைபெற்று வந்தது. அந்த சோதனையின் போது, தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

உடனே அதிகாரிகள், அந்த பயணி வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தனர். அப்போது, அந்த பையில் சுமார் 3.6 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து அதிகாரிகள் அந்தப் போதைப்பொருளை பறிமுதல் செய்து அதனைக் கடத்தி வந்த ஜான் ஜுட் தவாஸ் என்ற பயணியை கைது செய்தனர். இந்தப் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 22 கோடி ரூபாய் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், கைது செய்யப்பட்ட ஜானிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

22 crores worthable drugs kidnape in chennai airport


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->