கனமழை எதிரொலி.. தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
20.06.2023 thirupathur and Thiruvannamalai district holiday due to heavy rain
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கன மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இன்று வட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளிலும், புதுச்சேரி காரைக்கால் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யுக்கூடும். மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கன மழை காரணமாக இன்று திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
English Summary
20.06.2023 thirupathur and Thiruvannamalai district holiday due to heavy rain