10 வயது சிறுமி பலாத்காரம்.! சிக்கிய மளிகை கடைக்காரர்... அதிரடி தண்டனை விதித்த நீதிமன்றம்...! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மளிகை கடைக்காரருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் கனகராஜ்(76). இவரது கடைக்கு சம்பவத்தன்று மோர் மிளகாய் வாங்குவதற்காக அதே பகுதியை சேர்த்து 10 வயது சிறுமி வந்துள்ளார். அப்பொழுது கனகராஜ், சிறுமியை கடைக்குள் அழைத்துச் சென்று வலுகட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் சிறுமியை மிரட்டியுள்ளார்.

ஆனால் வீட்டிற்கு வந்த சிறுமி இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக கோவை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கனகராஜை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை பலாத்காரம் செய்த கனகராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூபாய் 5 லட்சம் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 years in jail for grocer who raped a 10 year old girl in kovai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->