வானூர் அருகே பயங்கரம்.! கொடூரமாக 2 ரவுடிகள் வெட்டிக்கொலை...! - Seithipunal
Seithipunal


வானூர் அருகே இரண்டு ரவுடிகள் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திருவக்கரை மெயின் ரோட்டில் இருந்து விவசாய நிலத்திற்கு செல்லும் வழியில் இன்று காலை இரண்டு வாலிபர்கள் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். இதைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

இதில் ஒரு வாலிபரின் ஒரு கையும் காலும் வெட்டப்பட்டு முட்புதர் அருகே கிடந்துள்ளது. மேலும் மற்றொரு வாலிபரின் தலை, கழுத்து மற்றும் மார்பு பகுதியில் வெட்டப்பட்டு இருந்துள்ளது. மேலும் இது குறித்த விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர்கள் புதுச்சேரி மாநிலம் பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த அருண் (23) மற்றும் அன்பரசன் (35) என்பதும், இவர்கள் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் என்பதும் தெரிய வந்தது. 

இதைத்தொடர்ந்து போலீசார் இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அருண் மற்றும் அன்பரசன் ஆகிய இரண்டு பேரையும் கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? முன் விரோதம் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 rowdy hacked to murder in vanur near


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->