#திருச்சி || டாஸ்மாக் மது அருந்தியதால் நண்பர்கள் இருவர் பலி.!! - Seithipunal
Seithipunal


 

தஞ்சை, மயிலாடுதுறையை தொடர்ந்து திருச்சியில் டாஸ்மாக் மது குடித்த இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் தச்சங்குறிச்சியைச் சேர்ந்த நண்பர்கள் சிவகுமார், முனியாண்டி ஆகிய இருவரும் நேற்று மதியம் தச்சங்குறிச்சியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளனர். மது அருந்தியதும் வீடு திரும்பியதும் இருவருக்கும் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரும் தச்சங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காததால் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முனியாண்டிக்கு இரவு முழுவதும் குளுகோஸ் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

மற்றொருவரான சிவகுமார் மாதாரிந்துவிட்டு வீடு திரும்பிய நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார். இதனிடையே லால்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முனியாண்டி மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் தற்பொழுது அவரும் உயிரிழந்து உள்ளார்.

இந்த நிலையில் முனியாண்டியின் மகன் மணிராஜ் இந்த சம்பவம் குறித்து அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டாஸ்மாக் மது அருந்து இருவரும் உயிரிழந்துவதால் திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித் குமார், ஏடிஎஸ்பி குத்தாலிங்கம், அஜய்தங்கம் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தமிழக முழுவதும் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 people died after consuming Tasmac alcohol in trichy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->