19 வயது பெண்ணை திருமணம் செய்த 44 வயது ஆணுக்கு 10 வயதில் மகன்! வெளியான அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் அருகே முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே, கல்லூரி மாணவியுடன்  2 வது திருமணம் செய்த நபரை கைது செய்து போலீஸ் விசாரித்து வருகின்றனர். 

இது தொடர்பாக வெளியான தகவல்களின் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவமணி  பைனான்ஸ் தொழில் செய்து இவருக்கு ஏற்கனவே திருமண முடிந்து 12ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. மேலும் முதல் மனைவிக்கும், சிவமணிக்கும் 10வயதில் ஒரு மகன் இருக்கிறான். 

இந்தநிலையில், சிவமணி இருக்கும் அதே பகுதியில் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும்  சினேகா என்ற பெண்ணுடன்  சிவமணிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் மிக நெருக்கமாக பல இடங்களுக்கு தனிமையில் சென்றுள்ளதாக கூறுகின்றனர். 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கல்லூரி மாணவி சினேகா காணாமல் போயுள்ளார். இதனால் பதறிப்போன சினேகாவின் பெற்றோர்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசாருக்குஅதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதில், சிவமணிக்கும், கல்லூரி மாணவி சினேகாவிற்கும் ஏற்கனவே தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இருவரும் திருமணம் செய்து கொண்டு வேளாங்கன்னியில் வசித்து வருவதையும் கண்டுபிடித்தனர். 

பின் வேளாங்கண்ணிக்கு சென்ற போலீஸார் சிவமணியை கைது விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

19 age girl married


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->