தமிழகத்தில் இன்று (18.05.2023) எந்தெந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.. முழு விவரம்.!
18.05.2023 power cut places in tamilnadu
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (18.05.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் மற்றும் நாகலூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
சேலம்
வேம்படிதாளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளது. அதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசூர், ஆச்சாள்புரம், எடமணல், திருவெண்காடு ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுகிறது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
திருப்பூர்
பல்லடம் பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
English Summary
18.05.2023 power cut places in tamilnadu