காதல் தோல்வி: மேற்கு வங்கத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் தற்கொலை.!
17 year old boy from West Bengal commits suicide in kirishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதல் தோல்வியால் மேற்கு வங்கத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கணேஷ்மால் என்பவரது மகன் அக்ஷயா(17) கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள உளிபண்டா கிராமத்தில் தங்கி விவசாயக் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் தனது மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
ஆனால் அந்தக் காதல் தோல்வி அடைந்ததால் சிறுவன் கடந்த சில நாட்களாக மனவேதனையில் காணப்பட்டுள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைப் பார்த்து அப்பகுதியில் இருந்தவர்கள் இது குறித்து தளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
17 year old boy from West Bengal commits suicide in kirishnagiri